Wednesday, January 1, 2014

இனிய புத்தாண்டு !! | Happy New year

கண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட 
எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தந்திட 
மலர்களும் சோலை நீரோடைகளும் உள்ளத்தில் இன்பம் பரவிட 
இல்லத்தில் சுகமும் இனிதே தங்கிட 

வாடிய முகங்களில் மகிழ்ச்சி மலர்ந்திட 
குறுகிக் குனிந்தவன் நெஞ்சம் நிமிர்ந்திட 
சிரிப்பு முத்துக்கள் என்றும் கண்களில் தங்கிட 
அலைஅலையாய் உற்றம் சுற்றோரை சேர்ந்திட

நினைத்தது நினைத்தது போலவே நிறைவேறிட 
அடுத்தது அடைவதற்கு உந்துதல் கூடிட
வானமே எல்லை என்பதை மறக்காமல் செயல்பட 
அந்த இறைவன் என்றுமே துணை இருப்பான் என்று உறுதிப்பட

கடும் சொற்களை குழியில் போட்டு புதைத்திட
இனிய வார்த்தைகளை இருகரம் நீட்டி நெஞ்சுக்குள் பதித்திட 
சார்ந்தார், இயலாதவர்களை அன்போடு அணைத்து உதவிட 
சிட்டுக்குருவி போல் சிறகை விரித்து , நம்பிக்கை அளித்திட 

சிறியவர்களைப்போல் துள்ளி ஆர்ப்பரித்து மகிழ்ந்திட
அனுபவம்மிக்க பெரியவர்களைப்போல் நிதானித்து பணியாற்ற 
சரிந்தாலும், நிமிர்ந்தாலும், ஆழமாக வேரூன்றி , சிந்தித்து செயலாற்ற 
குறை ஒன்றும் இல்லை என்பதை முழுமையாக நம்பிட 

வருகிறதே இனிய புத்தாண்டு!!
வாழ்க இனிதே எல்லோரும் பல்லாண்டு!

Thanks to Indira aunty for sharing a wonderful poem as New year wish.

Happy New year to all of you !!!

No comments:

Post a Comment