Saturday, July 28, 2018

கண் பேசும் வார்த்தைகள்


கண் பேசும் வார்த்தைகள்





கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 

ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 

காற்றில் இலைகள் பறந்த பிறகும் 
கிளையின் தழும்புகள் அழிவதில்லை 
காயம் நூறு கண்ட பிறகும்

உன்னை உள் மனம் மறப்பதில்லை

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் 
வருகிற வலி அவள் அறிவதில்லை 
கனவினிலும் தினம் நினைவினிலும் 
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை 

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
காற்றிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்ல 
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை 
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை 
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினிபூச்சிக்கு தெரியவில்லை 
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி 
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி 

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது 
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது 
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது 
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது 
பனி துளி வந்து மோதியதால் 
இந்த முள்ளும் இங்கே துண்டானது 
உலகத்தில் உள்ள பொய்களெல்லாம் 
அட புடவை கட்டி பெண்ணானது 
புயல் அடித்தால் மழை இருக்கும் 
மரங்களும் பூக்களும் மறைந்து விடும் 
சிரிப்பு வரும் அழுகை வரும் 
காதலில் இரண்டுமே கலந்து வரும். 

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் 
வருகிற வலி அவள் அறிவதில்லை 
கனவினிலும் தினம் நினைவினிலும் 
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை 
கண் பேசும் வார்த்தை... 
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை 
காத்திருந்தால் பெண் கனிவதில்லை 
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய 
கண்ணாடி இதயமில்லை 
கடல் கைமூடி மறைவதில்லை 
காற்றில் இலைகள் பறந்த பிறகும் 
கிளையின் தழும்புகள் அழிவதில்லை 

காயம் நூறு கண்ட பிறகும் 
உன்னை உள் மனம் மறப்பதில்லை..

No comments:

Post a Comment